ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் அதிமுக-வில் இணைந்தனர்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் திமுக-வில் இணைந்ததைத் தொடர்ந்து அதிருப்தியடைந்த அவரது ஆதரவாளர்கள், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வெல்லமண்டி நடராஜன், ஓபிஎஸ் எடுத்த முடிவு வருத்தமளிப்பதாகவும், அவரது தன்னிச்சையான நடவடிக்கையால் அதிமுக-விற்கு திரும்பியதாகவும் தெரிவித்தார். மேலும், ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததால் இருதரப்புக்கும் நஷ்டமே ஏற்படும் எனவும், வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
















