திமுக ஆட்சியில் மாணவர்களின் கைகளில் கஞ்சா புழங்குவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற என்டிஏ பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,கையில் புத்தகம் எடுக்க வேண்டிய மாணவர்கள் கஞ்சா வைத்துள்ளனர் என்றும், பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் கூறினார். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுளளது என்றும், இதற்கு திமுக பிராந்திய அரசே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
சட்டமன்ற தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையேயானது என தெரிவித்தார். “2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தர்மம் வெல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.
















