மக்காச்சோள பயிரை மத்திய அரசு அறிவித்த 2 ஆயிரத்து 400 ரூபாய்க்கு கொள்முதல் செய்யக்கோரி பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க விவசாய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மகசூல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, பயிர் காப்பீடு வழங்கக்கோரி திமுக அரசு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.
மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ஆயிரத்து 700 ரூபாய் மட்டுமே இடைத்தரகர்கள் கொள்முதல் செய்வதாகவும், இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.
















