கரூரில் அரசு நிகழ்ச்சிக்கு வந்த துணை மேயர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காந்தி கிராமம் அடுத்த தமிழ் நகர் பகுதியில், அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளிவரும் கழிவுநீரை அப்புறப்படுத்துவதற்கான தரைமட்ட தொட்டி அமைக்கும் பணி நடைபெற இருந்தது. சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜியை வரவேற்க மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், கவுன்சிலர் தியாகராஜன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அங்கு நின்று கொண்டிருந்தனர்.
அப்போது, அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை எனக் குற்றஞ்சாட்டி, அவர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த தகவலையடுத்து, செந்தில் பாலாஜி வேறு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.
















