போரை நிறுத்த CIA மூலம் துாதுவிட்டதா ஈரான்? தாக்குதலை தீவிரப்படுத்தும் அமெரிக்கா! - சிறப்பு தொகுப்பு
Jun 21, 2026, 01:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போரை நிறுத்த CIA மூலம் துாதுவிட்டதா ஈரான்? தாக்குதலை தீவிரப்படுத்தும் அமெரிக்கா! – சிறப்பு தொகுப்பு

Manikandan by Manikandan
Mar 7, 2026, 01:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக CIA-வைத் தொடர்பு கொண்டு ஈரான் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியான நிலையில், அதை ஈரான் அரசு மறுத்துள்ளது. அதே நேரத்தில் ஈரானுடன் இனி எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை என்று அதிபர் ட்ரம்ப் உறுதிப்பட தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் ஈரானும் பதிலடியாக ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்திவருகிறது.

இந்நிலையில் போர் தொடங்கிய முதல் நாளே அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ஈரான் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளிவந்தன.

ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி, ஓமன் அமைதிப் பேச்சுவார்த்தை குழுவினர் மூலம் அமெரிக்காவுடன் மீண்டும் அணுசக்தி பேச்சுவார்த்தைகளைத் தொடங்க புதிய முயற்சியை மேற்கொண்டதாகக் கூறப்பட்டது.

ஈரானின் உச்ச தலைவரான தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட மறுநாளே பேச்சுவார்த்தை நடத்த ஈரான் கோரிக்கை வைத்திருப்பதாக கூறிய அதிபர் ட்ரம்ப், இதை முதலிலேயே செய்திருக்க வேண்டும் என்றும், ஆனால் ஈரான் அதிக காலம் கடத்தி விட்டனர் என்றும் தெரிவித்திருந்தார்.

போர் எப்போது முடியும் என்று தெரியாத நிலையில் ஈரானின் உயிர் பிழைத்த தலைவர்கள், தங்கள் நாட்டின் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர ஆசைப்படுகிறார்கள்.

எனவே ஈரானின் உளவுத்துறை அமைச்சகத்தின் இரகசிய அதிகாரிகள் மூலம், பேச்சுவார்த்தைக்கு ஒரு வாய்ப்பை வழங்குமாறு C.I.A.-ஐ மறைமுகமாகத் தொடர்பு கொண்டதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை “பொய்” என்றும், இந்தத் தகவலை போருக்கு நடுவே ஒரு உளவியல் போர் என்றும் ஈரான் உளவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நடந்து வரும் போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்துவது மற்றும் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது குறித்து ஈரான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அமெரிக்காவைத் தொடர்பு கொள்ளவில்லை என்று ஐ.நா.வுக்கான ஈரான் தூதர் அலி ⁠பஹ்ரைனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்

இதனிடையே ஈரானுடன் ரகசிய பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா நடத்துகிறதா என்று ட்ரம்ப் அலுவலகத்தைத் தொடர்பு கொண்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரிடையாகவே கேட்டதாகவும் அதற்கு, ஈரானுடன் மறைமுகமாகவும் பேசவில்லை என்று வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.

தனது அனைத்து போர் நோக்கங்களும் நிறைவேறுவதற்கு முன்பே போர் நிறுத்தம் இல்லை என்பதில் உறுதியாக இருக்கும் இஸ்ரேல், அதை அடைவதை நோக்கி வேகமாக முன்னேறுகிறது என்றே சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

Tags: Benjamin netanyahuTrumpCIAisreal waramericaOmanIranisreal
ShareTweetSendShare
Previous Post

சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவோம் என்ற திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது? – அண்ணாமலை கேள்வி!

Next Post

நாங்குநேரி இரட்டைக் கொலை சம்பவம் – ஆறுதல் கூற சென்ற செல்வப்பெருந்தகையுடன் மக்கள் வாக்குவாதம்!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies