போரை நிறுத்த CIA மூலம் துாதுவிட்டதா ஈரான்? தாக்குதலை தீவிரப்படுத்தும் அமெரிக்கா! - சிறப்பு தொகுப்பு
Mar 19, 2026, 05:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போரை நிறுத்த CIA மூலம் துாதுவிட்டதா ஈரான்? தாக்குதலை தீவிரப்படுத்தும் அமெரிக்கா! – சிறப்பு தொகுப்பு

Manikandan by Manikandan
Mar 7, 2026, 01:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக CIA-வைத் தொடர்பு கொண்டு ஈரான் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியான நிலையில், அதை ஈரான் அரசு மறுத்துள்ளது. அதே நேரத்தில் ஈரானுடன் இனி எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை என்று அதிபர் ட்ரம்ப் உறுதிப்பட தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் ஈரானும் பதிலடியாக ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்திவருகிறது.

இந்நிலையில் போர் தொடங்கிய முதல் நாளே அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ஈரான் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளிவந்தன.

ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி, ஓமன் அமைதிப் பேச்சுவார்த்தை குழுவினர் மூலம் அமெரிக்காவுடன் மீண்டும் அணுசக்தி பேச்சுவார்த்தைகளைத் தொடங்க புதிய முயற்சியை மேற்கொண்டதாகக் கூறப்பட்டது.

ஈரானின் உச்ச தலைவரான தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட மறுநாளே பேச்சுவார்த்தை நடத்த ஈரான் கோரிக்கை வைத்திருப்பதாக கூறிய அதிபர் ட்ரம்ப், இதை முதலிலேயே செய்திருக்க வேண்டும் என்றும், ஆனால் ஈரான் அதிக காலம் கடத்தி விட்டனர் என்றும் தெரிவித்திருந்தார்.

போர் எப்போது முடியும் என்று தெரியாத நிலையில் ஈரானின் உயிர் பிழைத்த தலைவர்கள், தங்கள் நாட்டின் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர ஆசைப்படுகிறார்கள்.

எனவே ஈரானின் உளவுத்துறை அமைச்சகத்தின் இரகசிய அதிகாரிகள் மூலம், பேச்சுவார்த்தைக்கு ஒரு வாய்ப்பை வழங்குமாறு C.I.A.-ஐ மறைமுகமாகத் தொடர்பு கொண்டதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை “பொய்” என்றும், இந்தத் தகவலை போருக்கு நடுவே ஒரு உளவியல் போர் என்றும் ஈரான் உளவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நடந்து வரும் போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்துவது மற்றும் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது குறித்து ஈரான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அமெரிக்காவைத் தொடர்பு கொள்ளவில்லை என்று ஐ.நா.வுக்கான ஈரான் தூதர் அலி ⁠பஹ்ரைனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்

இதனிடையே ஈரானுடன் ரகசிய பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா நடத்துகிறதா என்று ட்ரம்ப் அலுவலகத்தைத் தொடர்பு கொண்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரிடையாகவே கேட்டதாகவும் அதற்கு, ஈரானுடன் மறைமுகமாகவும் பேசவில்லை என்று வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.

தனது அனைத்து போர் நோக்கங்களும் நிறைவேறுவதற்கு முன்பே போர் நிறுத்தம் இல்லை என்பதில் உறுதியாக இருக்கும் இஸ்ரேல், அதை அடைவதை நோக்கி வேகமாக முன்னேறுகிறது என்றே சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

Tags: Benjamin netanyahuTrumpCIAisreal waramericaOmanIranisreal
ShareTweetSendShare
Previous Post

சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவோம் என்ற திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது? – அண்ணாமலை கேள்வி!

Next Post

நாங்குநேரி இரட்டைக் கொலை சம்பவம் – ஆறுதல் கூற சென்ற செல்வப்பெருந்தகையுடன் மக்கள் வாக்குவாதம்!

Related News

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

வாரணாசியில் படகில் இப்தார் விருந்து – அசைவ உணவுகளை கங்கையில் வீசிய 14 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – 74 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு!

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் : ஈரான் செயல் தலைவர் அலி லாரிஜானி கொலை – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு – சிறப்பு தொகுப்பு!

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற்ற NDA : ஓங்கிய பாஜகவின் பலம் – சிறப்பு தொகுப்பு!

நலிவின் விளிம்பில் தமிழக ஜவுளித்துறை : மின் கட்டண உயர்வால் கதறும் தொழில்துறையினர்- சிறப்பு கட்டுரை!

நயினார் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் திமுக முனனாள் மாநில நிர்வாகி ஆர்.கே.வி. ராஜா!

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என தகவல்!

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை – அஷ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றம் செயல்படும் நாட்களை அதிகரிக்க வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies