போரை நிறுத்த CIA மூலம் துாதுவிட்டதா ஈரான்? தாக்குதலை தீவிரப்படுத்தும் அமெரிக்கா! - சிறப்பு தொகுப்பு
Jun 13, 2026, 02:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போரை நிறுத்த CIA மூலம் துாதுவிட்டதா ஈரான்? தாக்குதலை தீவிரப்படுத்தும் அமெரிக்கா! – சிறப்பு தொகுப்பு

Manikandan by Manikandan
Mar 7, 2026, 01:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக CIA-வைத் தொடர்பு கொண்டு ஈரான் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியான நிலையில், அதை ஈரான் அரசு மறுத்துள்ளது. அதே நேரத்தில் ஈரானுடன் இனி எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை என்று அதிபர் ட்ரம்ப் உறுதிப்பட தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் ஈரானும் பதிலடியாக ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்திவருகிறது.

இந்நிலையில் போர் தொடங்கிய முதல் நாளே அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ஈரான் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளிவந்தன.

ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி, ஓமன் அமைதிப் பேச்சுவார்த்தை குழுவினர் மூலம் அமெரிக்காவுடன் மீண்டும் அணுசக்தி பேச்சுவார்த்தைகளைத் தொடங்க புதிய முயற்சியை மேற்கொண்டதாகக் கூறப்பட்டது.

ஈரானின் உச்ச தலைவரான தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட மறுநாளே பேச்சுவார்த்தை நடத்த ஈரான் கோரிக்கை வைத்திருப்பதாக கூறிய அதிபர் ட்ரம்ப், இதை முதலிலேயே செய்திருக்க வேண்டும் என்றும், ஆனால் ஈரான் அதிக காலம் கடத்தி விட்டனர் என்றும் தெரிவித்திருந்தார்.

போர் எப்போது முடியும் என்று தெரியாத நிலையில் ஈரானின் உயிர் பிழைத்த தலைவர்கள், தங்கள் நாட்டின் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர ஆசைப்படுகிறார்கள்.

எனவே ஈரானின் உளவுத்துறை அமைச்சகத்தின் இரகசிய அதிகாரிகள் மூலம், பேச்சுவார்த்தைக்கு ஒரு வாய்ப்பை வழங்குமாறு C.I.A.-ஐ மறைமுகமாகத் தொடர்பு கொண்டதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை “பொய்” என்றும், இந்தத் தகவலை போருக்கு நடுவே ஒரு உளவியல் போர் என்றும் ஈரான் உளவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நடந்து வரும் போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்துவது மற்றும் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது குறித்து ஈரான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அமெரிக்காவைத் தொடர்பு கொள்ளவில்லை என்று ஐ.நா.வுக்கான ஈரான் தூதர் அலி ⁠பஹ்ரைனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்

இதனிடையே ஈரானுடன் ரகசிய பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா நடத்துகிறதா என்று ட்ரம்ப் அலுவலகத்தைத் தொடர்பு கொண்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரிடையாகவே கேட்டதாகவும் அதற்கு, ஈரானுடன் மறைமுகமாகவும் பேசவில்லை என்று வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.

தனது அனைத்து போர் நோக்கங்களும் நிறைவேறுவதற்கு முன்பே போர் நிறுத்தம் இல்லை என்பதில் உறுதியாக இருக்கும் இஸ்ரேல், அதை அடைவதை நோக்கி வேகமாக முன்னேறுகிறது என்றே சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

Tags: americaOmanIranisrealBenjamin netanyahuTrumpCIAisreal war
ShareTweetSendShare
Previous Post

சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவோம் என்ற திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது? – அண்ணாமலை கேள்வி!

Next Post

நாங்குநேரி இரட்டைக் கொலை சம்பவம் – ஆறுதல் கூற சென்ற செல்வப்பெருந்தகையுடன் மக்கள் வாக்குவாதம்!

Related News

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies