மாணவர்களுக்கு, நவீன கல்வியை வழங்குவதே மத்திய அரசின் முதன்மையான நோக்கம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் தொடர்பான இணையவழி கருத்தரங்கில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, AI போன்ற வளர்ந்து வரும் துறைகளில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது மட்டுமின்றி, உருவாக்குபவர்களாகவும் நாம் இருக்க வேண்டும் என கூறினார்.
இதனை கருத்தில் கொண்டே மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளதாக கூறிய அவர், புதிய கல்விக் கொள்கை மனப்பாடம் செய்யும் திறனைவிட சிந்திக்கும் திறனை ஊக்குவிப்பதாக குறிப்பிட்டார்.
















