தமிழகத்தில், தற்போது எந்த ஒரு வன்முறைச் செய்தியும் மக்களுக்கு அதிர்ச்சியளிப்பதில்லை என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் சட்டம் ஒழுங்கானது சுவடின்றி சிதைந்து வரும் திமுக ஆட்சியில், இன்று சென்னை திரிசூலத்தில் 17 வயது சிறுவன் உட்பட இருவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர் என கூறினார்
கடந்த ஐந்தாண்டுகளாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அரிவாள் வெட்டு ஆகியவை அன்றாட நிகழ்வுகளாகிவிட்ட தமிழகத்தில், தற்போது எந்த ஒரு வன்முறைச் செய்தியும் மக்களுக்கு அதிர்ச்சியளிப்பதில்லை என தெரிவித்தார்
பயத்தோடும், கவலையோடும் ஒவ்வொரு நாளையும் கடக்கும் தமிழக மக்களின் ஓரே எதிர்பார்ப்பு தேர்தல் நாள் மட்டுமே! விடியா ஆட்சியை விரட்டியடித்து, வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழகத்தை அமைதிப்பூங்காவாக உருமாற்றும் நாளுக்காக மக்கள் காத்து கொண்டிருக்கின்றனர். தேர்தல் வரட்டும்! தமிழகம் மீளட்டும் என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
















