திமுக ஆட்சியில் வயது வித்தியாசமின்றி பாலியல் வேட்டைக்கு பலியாகும் பெண்கள் என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் கிருஷ்ணகிரியில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த 70 வயது முதியவரை கொன்று, அவரது மனைவியான 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்தார்
2 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, 60 வயதான மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை என ஒரு வாரகாலமாக தொடர்ந்து வெளியாகி வரும் செய்திகள் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு இம்மியளவும் இல்லை என்பதை பட்டவர்த்தனமாக்குகிறது என கூறினார்
திறனற்ற நிர்வாகத்தால் திக்கெட்டிலும் கயவர்களை சுதந்திரமாகத் திரியவிட்டு, தினந்தினம் பெண்களையும் குழந்தைகளையும் நரக வேதனையை அனுபவிக்கச் செய்துவிட்டு, வெல்லும் தமிழ்ப்பெண்கள் என்று கூற நாகூசவில்லையா முதல்வர் ஸ்டாலின் அவர்களே? பல வீர மங்கைகளை உலகிற்கு ஈந்த தமிழகத்தை, பெண்கள் அஞ்சி வாழும் பகுதியாக மாற்றிய பாவம் திமுக அரசை என்றும் சும்மா விடாது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
















