பெட்ரோலியம், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் இயற்கை எரிவாயுவின் கிடைக்கும் தன்மை, வழங்கல் மற்றும் சமமான விநியோகத்தை ஒழுங்குப்படுத்துவதற்காக அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான் போர் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தி முனையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால், நாட்டின் எரிசக்தி மற்றும் வர்த்தகங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய கப்பல் பாதைகள் மூடப்பட்டுள்ளதால் உலகளாவிய எரிபொருள் விலைகளில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து வருவதாகவும்,
சில நகரங்களில் LPG சிலிண்டர் விநியோகங்களில் தாமதம் பற்றிய தகவல்கள் கவலையளிப்பதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.
எரிபொருள் விநியோகம் தடையற்ற முறையில் கிடைக்கவும், பதுக்கலைத் தடுக்கவும் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் LPG உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும்,
LPG தயாரிக்க பயன்படும் ப்ரோப்பேன் மற்றும் பியூட்டேன் ஆகியவற்றை
அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், LPG வீட்டு சமையல் பயன்பாட்டிற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
















