என்டிஏ கூட்டணி மாநாட்டில் பங்கேற்க திருச்சி வந்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.
திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில், இன்று மாலை என்டிஏ கூட்டணி மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், திருச்சி வந்தார். அங்குள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ள அவரை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பியூஸ் கோயல், திமுகவின் குடும்ப ஆட்சிக்கு, இபிஎஸ் தலைமையிலான என்டிஏ கூட்டணி முடிவுக்கு கொண்டு வரும் என குறிப்பிட்டார்.
டாஸ்மாக் ஊழல் மூலம் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்திற்கு சென்றுள்ளது எனவும் தமிழகத்தில் அனைத்து துறை ஒப்பந்தங்களில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
















