தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தான், திமுகவின் கடைசி தேர்தல் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருச்சி என்டிஏ பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுக என்றாலே குடும்பக் கட்சி; கருணாநிதி குடும்ப ஆட்சி இந்த தேர்தலுடன் அகற்றப்படும் என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் சிறுமிகள் முதல மூதாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், திமுக ஆட்சியில் விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
















