பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் தாய்மாமன் வீட்டு சீர் கொண்டு வருவதை போல வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்ற என்டிஏ பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் மோடி எந்த நாட்டிற்கு போனாலும் தமிழ் மொழியின் பெருமைகளை பேசி வருவதாக தெரிவித்தார்.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் திமுகவின் குடும்ப ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்டும் என்றும அவர் கூறினார்.
திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
















