ராஜ்யசபா எம்பி பதவிக்கு கிறிஸ்டோபர் மாணிக்கத்தை தேர்வு செய்ததுபோல, சட்டசபை தேர்தலிலும் வேட்பாளர்களை தேர்வு செய்ய ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு, ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவி ஒதுக்கப்பட்டது. இப்பதவிக்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர் உள்ளிட்ட பலர் முயற்சித்தனர்.
யாரும் எதிர்பாராத வகையில், திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் மாணிக்கம் ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார்.
புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், ராகுல்காந்தி கிறிஸ்டோபரை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.
இதே பாணியில் பேரவைத் தேர்தலிலும், வேட்பாளர்களை தேர்வு செய்ய, ராகுல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை கலக்கமடையச் செய்துள்ளது.
















