எரிவாயு சிலிண்டர் விவகாரம் தொடர்பாக மக்களிடம் சிலர் தேவையற்ற பீதியை உருவாக்க முயற்சிப்பதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்று வரும் NXT சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசியவர், மேற்காசியாவில் நிலவும் போரால் உலகின் அனைத்து நாடுகளும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.
கச்சா எண்ணெய் விநியோக சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடைகளை நீக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது எனக் கூறிய பிரதமர் மோடி, எரிசக்தி தேவைக்காக வெளிநாடுகளை மட்டுமே நம்பியிருக்க கூடாது என்ற நிலைக்கு இந்தியா நகர்கிறது எனவும் தெரிவித்தார்.
















