அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளை போன்று செயல்பட கூடாதென இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,தூத்துக்குடி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், டிஜிபி, உள்துறை செயலாளர் அளித்த விளக்கம், அரசியல்வாதிகளின் பேச்சு போன்று இருந்ததாக குற்றம்சாட்டினார்.
காவல்துறையின் சட்டமீறல்கள், பொதுமக்களை பகிரங்கமாக மிரட்டும் காணொளிகள் சமூகவலைதளங்களில் வெளியானாலும் நடவடிக்கை இல்லை எனவும்
காவல்துறை அதிகாரிகள் ஆளும்கட்சியின் ஏவல்துறை போன்று செயல்படுவதாகவும் அவர் சாடியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகம் முதல் விளாத்திகுளம் வரை பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடப்பதாக கூறிய காடேஸ்வரா சுப்பிரமணியம்,
இவ்விவகாரங்களில் காவல்துறையின் நடவடிக்கைகள் தாமதமாகவே உள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார்.
















