தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீரழித்த திமுக ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை தொண்டாமுத்தூரில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பே இல்லாத சூழ்நிலை உருவாகி உள்ளதாகவும், சட்டம், ஒழுங்கை சீரழித்த திமுக ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் எனவும் அவர் கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு பெண்களுக்கும் வங்கி கணக்கில் ரூ.10,000 வர உள்ளதாகவும், திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என மக்கள் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும்; மத்திய அரசு திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்றும் அண்ணாமலை கூறினார்.
















