ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வெளித் தாக்குதலில் 400 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்தநிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், உமர் போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது பாகிஸ்தான் ராணுவம் வான்வெளித் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டதாகவும், 300-க்கும் பேர் காயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபிர்தோத் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதற்கு ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஐநாவில் பேசிய அவர், ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது அப்பட்டமான சர்வதேச சட்ட விதி மீறல் என சாடினார், மதம் சார்ந்த வன்முறைகளை உலகம் “பாரபட்சமின்றி” கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், அனைவரையும் உள்ளடக்கிய சமூகங்கள், மத நல்லிணக்கம் உள்ளிட்டவற்றில் ஐ.நா.வின் கவனம் வலுவாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
















