திமுக பிராந்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் என்டிஏ கூட்டணி ஆர்பாட்டம்!
Mar 17, 2026, 06:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக பிராந்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் என்டிஏ கூட்டணி ஆர்பாட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 17, 2026, 03:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், கோகுல இந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து சட்டம் – ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் டாஸ்மாக், கனிம வளம் என அனைத்திலுமே திமுக ஊழல் செய்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதே போல மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயக்குமார், செல்லூர் ராஜு உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.

அப்போது பேசிய நயினார் நாகேந்திரன், திமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களின் கையில் புத்தகத்திற்கு பதிலாக கஞ்சா பொட்டலங்கள் உள்ளதாகவும், உயர் ரக போதைப் பொருட்கள் எளிதில் கிடைப்பதாகவும் தெரிவித்தார்.

தஞ்சையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமை தாங்கினார். இதில் என்.டி.ஏ கூட்டணியை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். அப்போது கண்டன உரையாற்றிய டிடிவி தினகரன், தமிழகத்தில் நடைபெறும் பாலியல் குற்றங்களுக்கு பின்னால் திமுக நிர்வாகிகளின் தலையீடு இருப்பதாக விமர்சித்தார்.

நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார். மக்களை குழப்பத்தில் ஆழ்த்துவதே திமுக அரசின் வாடிக்கை என்று கூறிய அவர், மத்திய அரசிடம் இருந்து தாராளமாக நிதி பெற்றுவிட்டு, நிதியே வழங்கவில்லை என திமுக வீண் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் விமர்சித்தார்.

கடலூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் ஊழல்கள் நடைபெறாத துறைகளே இல்லை எனவும், பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் வேதனையளிப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் ஸ்டாலின் தமிழகத்தில் செயலற்ற முதலமைச்சராக இருந்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

இதே போல புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையிலான இந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக, அதிமுக, அமமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Tags: nda alliance protestChennaiAIADMK general secretary Edappadi PalaniswaminainarM.G.R. Nagar
ShareTweetSendShare
Previous Post

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி – கூட்டணியில் இருந்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி வெளியேறியதாக தகவல்!

Next Post

கடன் பெறுவதில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது – இபிஎஸ் விமர்சனம்!

Related News

மகாராஷ்டிராவில் பதுக்கி வைக்கப்பட்ட 330 எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்!

எரிவாயு சிலிண்டர் விநியோகம் தடையின்றி தொடர்கிறது – இந்தியன் ஆயில் நிறுவனம்

ஹோர்மூஸ் நீரிணை வழியில் திக் திக் பயணம் – குஜராத் வந்தடைந்தது நந்தா தேவி கப்பல்!

அடுத்த 3 நாட்களில் தேர்தல் அறிக்கை தயாராகி விடும் – புதுச்சேரி பாஜக தலைவர் ராமலிங்கம் உறுதி!

துறையூர் அருகே மருத்துவ வசதி கிடைக்காமல் சிறுவன் உயிரிழப்பு – அண்ணாமலை கண்டனம்!

வீட்டு உபயோக சிலிண்டர் பெறும் நுகர்வோருக்கான பயோமெட்ரிக் அங்கீகாரம் – மத்திய அரசு விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

சிங்கம்புணரி அருகே இறந்த தந்தைக்கு இறுதி காரியம் செய்துவிட்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்!

விளாத்திகுளம் அருகே கொலை செய்யப்பட்ட மாணவி – அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஆறுதல்!

கடன் பெறுவதில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது – இபிஎஸ் விமர்சனம்!

திமுக பிராந்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் என்டிஏ கூட்டணி ஆர்பாட்டம்!

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி – கூட்டணியில் இருந்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி வெளியேறியதாக தகவல்!

ஆதவ் அர்ஜுனாவை தவெக தலைவர் விஜய் ஏன் கண்டிக்கவில்லை? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திசையன்விளை அருகே எரிந்த நிலையில் இருந்த காருக்குள் 4 பேர் சடலமாக மீட்பு!

கரூரில் 41 பேர் பலியான சம்பவம் – சிபிஐ முன்பு விசாரணை ஆஜரானார் செந்தில் பாலாஜி!

மதுரையில் மாவீரர் சத்ரபதி சிவாஜி நூல் வெளியீட்டு விழா!

அறந்தாங்கியில் திருமணத்திற்காக வைத்திருந்த 37 சவரன் தங்க நகைகள் கொள்ளை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies