சேலத்தில் அரசு திட்ட பணியாளர்களுக்கு விநியோகிக்க செல்போன்கள் வைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் திமுக இருப்பதாக அதிமுக எம்பி இன்பதுரை குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்த பின் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
அப்போது, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின் எந்த திட்டங்களையும் வழங்க கூடாது என தெரிவித்தார். அரசு திட்டமாக இருந்தாலும் இலவசங்களை வழங்க கூடாது என்றும், 2,604 செல்போன்கள் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
செல்போன்கள் விநியோகிப்பதன் பின்னணியில் திமுக இருக்குமோ என அச்சம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
















