டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அவருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
டெல்லி சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, சட்டமன்ற தேர்தலில் பாஜக-வுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளை இறுதி செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இன்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ஆகியோரும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.
















