மார்ச் 13 முதல் 15ஆம் தேதி வரை ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஹரியானாவில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே, ஆர்எஸ்எஸ் அமைப்பு பணிகளை நாடு முழுவதும் விரிவுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பணிகளை விரிவுபடுத்த வேண்டுமானால், அமைப்பின் அலகுகள் சிறியதாக இருக்க வேண்டும் என்றும், அப்போதுதான் அனைத்து பகுதிகளிலும் கவனம் செலுத்த முடியும் எனவும் கூறினார். புதிய முயற்சியாக தற்போதுள்ள மாநிலங்களுக்கு பதிலாக கோட்டங்களை உருவாக்க முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த புதிய கட்டமைப்பு நூற்றாண்டு விழா முடிந்ததும் நடைமுறைக்கு வரும் என்றும், அதுவரை தற்போதுள்ள நிலையே தொடரும் எனவும் குறிப்பிட்டார். மேலும், புதிய மாற்றங்களால் 80க்கும் மேற்பட்ட கோட்டங்கள் உருவாகும் என ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே தெரிவித்துள்ளார்.
















