மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில், சென்னையில் நாளை மதியம் NDA கூட்டணியின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்,
இது குறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது, உலகிற்கே டெல்லி தான் வழிகாட்டி கொண்டிருப்பதாக தெரிவித்தார். என்டிஏ கூட்டணி குறித்து திமுக தலைவர் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். திமுக தலைமையில் கூட்டணி அமைத்தும் குளறுபடி நிலவுவதாக நயினார் கூறினார்.
















