தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தேசிய ஜனநாயக கூட்டணி இன்று தொடங்குகிறது.
தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக, ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, பல்வேறு கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன.
இந்நிலையில், மத்திய அமைச்சரும், பாஜக மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று சென்னை வரவுள்ளார். அவர் இன்று மாலை கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
















