திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம் செய்தார்.
தனது குடும்பத்தினருடன் திருமலைக்கு வருகை தந்த அவர், ஏழுமலையானை மனமுருகி வழிபட்டார். தரிசனத்திற்குப் பின் அவருக்குக் கோயில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆசி வழங்கினர்.
தொடர்ந்து, திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர், பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது மற்றும் சேவைகளை விரைவுபடுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
















