டெல்லி என்றாலே முதலமைச்சர் ஸ்டாலின் நடுங்குவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களை பற்றி கவலைப்படாமல் டெல்லி, டெல்லி என திமுகவினர் கூறி வருவதாக அவர் தெரிவித்தார்.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் என்றும், தொலைக்காட்சிகள் கூட சேர்ந்து கட்சியை தொடங்கி 6-வது அணியை உருவாக்கிவிடும் என்றும் நயினார் கூறினார்.
அமைச்சர் பியூஸ் கோயல் நாளை சென்னை வருவதாகம், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
















