தமிழகத்தில் எட்டு கோடி மக்களுடன், தான் கூட்டணி வைத்துள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ள சீமான்,
ராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடையில் தமது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்தார்.
அப்போது, மது விற்பனையை 40 ஆயிரம் கோடியில் இருந்து 45 ஆயிரம் கோடியாக உயர்த்துவதுதான் தமிழகத்தின் வளர்ச்சியா? எனக் கேள்வியெழுப்பிய சீமான்,
மது மற்றும் கஞ்சா போதையால் தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளதாக கூறினார்.
















