திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வந்தவாசி அருகே மருதாடு பகுதியில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது.
சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை இந்த மையத்தில் விற்பனை செய்கின்றனர்.
இந்நிலையில், இங்கு வேலை செய்யும் பணியாட்கள் மூட்டைக்கு நாற்பத்து ஐந்து ரூபாய் முதல் ஐம்பத்து ஐந்து ரூபாய் வரை வசூலிப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், மூட்டைக்கு இரண்டு கிலோ வரை நெல் திருடப்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கொள்முதல் நிலைய அலுவலரிடம் மனு அளித்துள்ள விவசாயிகள், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
















