அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் போர் நிறுத்த அறிவிப்பினை மீறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருப்பது உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவின் துணை கொண்டுதான் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.
ஈரான் வைத்திருக்கும் அணு ஆயுதங்களால் உலக நாடுகளுக்கு அபாயம் இருப்பதாக கூறி நெதன்யாகுவுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் டிரம்ப் வழங்கி வருகிறார்.
இத்தகைய சூழலில் ஈரான் உடன் நல்லமுறையில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அறிவித்த டிரம்ப், அடுத்த ஐந்து நாட்களுக்கு தாக்குதல்களை நிறுத்தி வைக்க அமெரிக்காவின் போர் துறைக்கு உத்தரவிட்டார்.
ஆனால், எத்தகைய சூழலிலும் இஸ்ரேலின் நலன்களை பாதுகாப்போம் என ட்வீட் செய்திருந்த பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானின் முக்கிய எரிவாயு மையங்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தியுள்ளார்.
இந்த தாக்குதலில் இஸ்பஹானில் உள்ள எரிவாயு நிலையமும், கரம்ஷாரில் மின் உற்பத்தி நிலையத்திற்குச் செல்லும் முக்கிய எரிவாயு குழாயும் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.
இதனால் ஆரம்பத்திலிருந்து தங்களுக்கு கை கொடுத்து வரும் டிரம்ப்பின் பேச்சையே நெதன்யாகு மதிக்கவில்லையோ? என்கிற கேள்வி உருவாகியுள்ளது.
















