கள்ளக்குறிச்சி அருகே ஶ்ரீமுனியப்ப சாமி குலதெய்வ வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்படாததைக் கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்து கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மேலப்பட்டு கிராமத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்தநிலையில் அவர்கள் வழிபடும் ஸ்ரீமுனியப்ப சுவாமி கோயிலில் குலதெய்வ வழிபாடு நடத்த அனுமதி கோரி மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை கூறப்படுகிறது.
ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் வீட்டு சுவரில் வரையப்பட்ட அரசியல் கட்சி சின்னங்களை அழித்து பேனர்களுடன் ஆதார், வாக்காளர் அட்டைகளை கையில் ஏந்தியபடி தேர்தலை புறக்கணிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
















