நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் போதை ஊசி, மருந்துகளை விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
குமாரபாளையம் அருகே உள்ள தட்டாங்குட்டை மயான பகுதியில் போதை ஊசி, மருந்துகளை விற்பனை செய்ததாக சிபி ஹரிஷ், திருநாவுக்கரசு, ஸ்ரீனிவாசன், வசந்த், கார்த்தி, ஹக்கீம் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் 6 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதனை அடுத்து, 6 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
















