திமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட அமைச்சர் மனோ தங்கராஜை, தவெகவில் சேர்க்க ஆதவ் அர்ஜுனாவுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் தடைவிதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் மாவட்டத்தின் முக்கிய அமைச்சரான மனோ தங்கராஜ் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதால், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட திமுக தலைமை வாய்ப்பு வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியில் இருந்த மனோ தங்கராஜ், தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனாவை சென்னை போயஸ் கார்டன் வீட்டில் சந்தித்தது, தேர்தலில் போட்டியிட சீட் கேட்டதாக தெரிகிறது. இதனை கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்திடம், ஆதவ் அர்ஜுனா கொண்டு சென்றபோது, மனோ தங்கராஜை நம்பி எந்த காரியத்திலும் இறங்க வேண்டாம் என கூறியதாகவும் கூறப்படுகிறது .
சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் பொறுப்பில் இருந்து திமுக கழற்றி விட்டபோது தவெகவை நோக்கி ஓடி வந்ததாகவும், தவெக தலைவரிடம் பேசி எல்லா ஏற்பாடுகளையும் செய்தபோது மீண்டும் அமைச்சராகிவிட்டார் எனவும் ஆனந்த் தெரிவித்ததாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
















