மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக கனிமவளக் கொள்ளை, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக அதிமுக வேட்பாளர் மாணிக்கம் தெரிவித்துள்ளார்.
வாடிப்பட்டிக்கு வருகை தந்த அதிமுக வேட்பாளர் மாணிக்கத்திற்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து, கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக வேட்பாளர் மாணிக்கம் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.
இதில், தேர்தல் வியூகங்கள் மற்றும் வாக்குச் சேகரிப்பு முறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
அப்போது பேசிய அவர், மக்களின் நலன் காக்க வேண்டும் என்றால் மீண்டும் தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
















