ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கௌஹாத்தியில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 127 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர்.
அதிரடி காட்டிய சூர்யவன்ஷி 4 பவுண்டரி, 5 சிக்சருடன் 15 பந்துகளில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதி வரை நின்று ஆடிய ஜெய்ஸ்வால் 38 ரன்கள் எடுத்தார். இறுதியில் 47 பந்துகள் மீதமிருக்க 8 விக்கெட் வித்தியாசத்தில் 128 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எளிதில் வெற்றி பெற்றது.
















