கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் காட்டு யானை ஒன்று ஆட்டோவை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேலூர் தாலுகாவில் உள்ள குப்புகோடு கிராமத்தில் ஒற்றை யானை புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. அப்போது கிருஷ்ணப்பா என்பவரது வீட்டின் அருகே நின்றிருந்த ஆட்டோவை ஆக்ரோஷத்துடன் முட்டி தாக்கியது.
ஆட்டோவை சேதப்படுத்திய பின், அந்த யானை அருகிலுள்ள தோட்டத்திற்குள் புகுந்தது. இந்த சம்பவம் காரணமாக அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள் யானையை காட்டுக்குள் விரட்ட வேண்டும் எனவும் மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் நுழையாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
















