தாம் இறந்தால் தன் மீது அதிமுக கொடியை போர்த்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் தங்கமணி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக தங்கமணி போட்டியிடும் நிலையில், பள்ளிபாளையத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய தங்கமணி, தனது பிள்ளைகளுக்கு திருமணம் ஆகிவிட்டதால் கட்சியினர் மட்டுமே தனது குடும்பம் எனக்கூறினார்.
அதிமுக ரத்தமே தனது உடலில் ஓடுவதாகவும், துரோகத்தை என்றுமே எண்ணி பார்த்தது இல்லை எனவும் குறிப்பிட்டார்.
















