சென்னை அயனாவரத்தில் ஆதவ் அர்ஜூனா பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்டத்திற்குள் மதுபாட்டில் வீசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்…
சென்னை வில்லிவாக்கம் சட்டப்பேரவை தொகுதியில் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் அயனாவரம் தொகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது தவெக நிர்வாகிகள் மேடையில் பேசிக் கொண்டிருந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து பெண் தொண்டர்கள் மீது உடைந்த கண்ணாடி துண்டுகள் வீசப்பட்டன. இதில் காயமடைந்த பெண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே பாட்டில் வீசப்பட்டதால் ஆத்திரமடைந்த ஆதவ் அர்ஜூனா, திமுகவினர் அராஜகம் செய்வதாகவும் திருப்பி அடித்தால் தாங்க மாட்டீர்கள் எனவும் ஆவேசத்துடன் கூறினார்.
















