திருச்சி மாவட்டம் முசிறி அருகே திமுக நிர்வாகி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருட்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
முசிறி அருகே உள்ள நாச்சம்பட்டி கிராமத்தில் அய்யாவு என்ற திமுக நிர்வாகி வீட்டில் 2 ஆயிரத்து 800 சில்வர் பாத்திரங்கள், மற்றும் சர்க்கரை ஆகியவை மூட்டைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இவற்றின் மதிப்பு 11 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் என கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த மண்ணச்சநல்லூர் என்டிஏ வேட்பாளர் பரதன், அதிமுக ஒன்றிய செயலாளர் ஆமூர் ஜெயராமன் உள்ளிட்டோர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, திமுக நிர்வாகியின் வீட்டின் வைக்கப்பட்டிருந்த பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் குறித்து தேர்தல் பறக்கும் படை அலுவலர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















