ஆண்டவன் சொத்தில் கைவைத்த ஸ்டாலின் அரசுக்கு ஆண்டவனே தண்டனை கொடுப்பார் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
சிவகங்கையில் பரப்புரை மேற்கொண்ட அவர், திமுமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது என தெரிவித்தார் நிரந்தர டிஜிபியை நியமிக்க முடியாத திமுக அரசு தேவையா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
“பழனி கோயில் வளர்ச்சிக்கு பக்தர்கள் கொடுத்த காணிக்கை அரசின் மாற்று திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், பக்தர்களின் காணிக்கையை அரசு திட்டங்களுக்கு ஏன் செலவிட வேண்டும் என்றும் இபிஎஸ் குறிப்பிட்டார்.
கோயில் நகைகளை எந்த ஆட்சியும் தொடவில்லை. ஆனால் தற்போது திமுக அரசு கோயில் நகைகளை அனைத்தையும் உருக்கிவிட்டதாகவும் அவர் கூறினார்.
ஆண்டவன் சொத்தை அபகரித்தால் அந்த ஆண்டவன் தக்க தண்டனை வழங்குவார் என்றும் இபிஎஸ் குறிப்பிட்டார்.
















