பிரதமர் மோடியின் ஆதரவோடு தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியமையும் என அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ தெரிவித்துள்ளார்.
சென்னை துறைமுகம் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்தல் பணிமனை திறக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ, மாவட்ட செயலாளர் பாலகங்கா, பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், கட்சி நிர்வாகிகளுடன் பாலகங்கா மற்றும் வினோஜ் பி செல்வம், ராயபுரம் மனோ ஆகியோர் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ, அமைச்சர் சேகர்பாபு முதலமைச்சர் ஆதரவோடு நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாவும், துறைமுக தொகுதிகளில் சமூக விரோதிகள் நிலங்களை அபகரித்து உள்ளனர் எனவும் குற்றம்சாட்டினார்.
அமைச்சர் சேகர் பாபுவுக்கு புழல் சிறை காத்துக் கொண்டிருக்கிறது எனவும் கூறினார். மேலும், தமிழகம் மீண்டும் ஒரு அமைதி பூங்காவாக மாற வேண்டும் என்றால் திமுக ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
















