தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து தரப்பு மக்களும் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் என தெரிவித்தார்.
தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமையும் என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி கூட்டணி என்றும் கூறினார்.
தேர்தலில் போட்டியிட அனுபவம் வாய்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
















