திமுக அரசின் ஊழல் காரணமாக தமிழகத்தில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக, மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் கிருத்திகா சிவக்குமாரை ஆதரித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், பிரச்சாரம் மேற்கொண்டார்.
பூந்துறை நால் ரோடு, சோளிபாளையம், செங்காட்டுவலசு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். பூந்துறை நால்ரோடு சந்திப்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது பேசிய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், திமுகவின் வாரிசு அரசியல் மற்றும் ஊழல் குறித்து கடுமையாக விமர்சித்தார். மத்திய அரசு தமிழகத்திற்கு நிறைய திட்டங்கள் கொடுத்தாலும், பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை என்று குற்றம் சாட்டினார்.
இதைத்தொடர்ந்து நமசிவாய பாடலைப் பாடியதோடு, அங்கிருந்த அனைவரையும் அதனை பாட வைத்தார்.
















