செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கட்சியை 90 சதவீதம் விற்பனை செய்து விட்டார் எனவும், காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை என்றும் அக்கட்சியில் இருந்து விலகிய மகளிர் அணி தலைவி ஹசீனா சையது தெரிவித்துள்ளார்
தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்,.தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் பிரச்னை என்றால் அதற்கு காரணம் செல்வப்பெருந்தகை தான் என்றும், காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அவர் கூறினார்.
சிறுபான்மையினர் என்பதாலேயே கட்சியில் பல முறை புறக்கணிக்கப்பட்டதாகவும், தான் ஒரு பீனிக்ஸ் பறவை, நிச்சயம் வேறு கட்சியில் இணைவேன் என்றும் ஹசீனா சையது கூறினார்.
















