திமுக வேட்பாளர்களை ஜெயிக்க வைத்தால் ஜனநாயகம் தவறான கைகளுக்கு போய்விடும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஆனந்தன் அய்யாசாமியை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், பாஜக அரசுக்கு எதிராக திமுக தலைவர்கள் பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
100 நாள் வேலை திட்டத்திற்கு பிரதமர் மோடி நிதியளிக்கவில்லை என கனிமொழி பொய் பேசுவதாகவும், “100 நாள் வேலை திட்டத்திற்கு மட்டும் பிரதமர் மோடி அரசு தமிழகத்திற்கு ரூ.46,000 கோடி வழங்கியுள்ளது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். திமுக கூட்டணி வெற்றி பெற எங்கும் எந்த அறிகுறியும் இல்லை என்றும் அவர் கூறினார்.
















