கோவை தெற்கு தொகுதியில் கூப்பன் நிரப்பும் பணியில் ஈடுபட்ட செந்தில்பாலாஜி ஆதரவாளர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் செந்தில் பாலாஜி வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில் அத்தொகுதியில் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் வாக்காளர்களிடம் என்ன பொருள் வேண்டும் என கூப்பனை நிரப்பும் பணியில் ஈடுபட்டனர்.
இதனை கண்ட பிற கட்சியினர், வெற்றி அடைந்தால் செய்ய வேண்டிய வேலையை இப்போது ஏன் செய்கிறீர்கள்? என அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
டோக்கன் கொடுத்து மக்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய அவர்கள், தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
















