சூரிய ஒளியில் ஜொலிக்கும் சிறிய நகரங்கள் : இந்தியாவின் புதிய சோலார் புரட்சி - சிறப்பு தொகுப்பு!
Jul 15, 2026, 09:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சூரிய ஒளியில் ஜொலிக்கும் சிறிய நகரங்கள் : இந்தியாவின் புதிய சோலார் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 15, 2026, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு காலத்தில் சோலார் மின்சாரம் என்றாலே பெருநகரங்கள்தான் முன்னணியில் இருந்தன. ஆனால் இன்று அந்த நிலை மாறியுள்ளது. இந்தியாவின் 2 மற்றும் 3-ஆம் நிலை நகரங்கள்தான் சூரிய சக்தி பயன்பாட்டில் புதிய வரலாறு படைத்து வருகின்றன. ஏன் இந்த மாற்றம்? யார் இதற்கு காரணம்? விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.

இந்தியாவில் சூரிய மின்சார உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், இந்த வளர்ச்சிக்கு முகவரியாக இருப்பது டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்கள் அல்ல. மாறாக, லக்னோ, நாக்பூர், சூரத், வாரணாசி, எர்ணாகுளம் உள்ளிட்ட இரண்டு மற்றும் 3-ஆம் நிலை நகரங்கள்தான் இன்று Rooftop Solar அமைப்புகளில் வேகமாக முன்னேறி வருகின்றன.

இதற்கு முக்கிய காரணம் மத்திய அரசின் சூரிய வீடு மின்சார திட்டம். வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல்கள் அமைக்க மானியம் வழங்கப்படுவதால், நடுத்தர மற்றும் சாதாரண குடும்பங்கள் அதிகளவில் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

ஒருமுறை முதலீடு செய்தால், பல ஆண்டுகளுக்கு மின்கட்டணத்தை கணிசமாகக் குறைக்க முடியும் என்பதால், சோலார் அமைப்புகளுக்கு மக்களிடம் வரவேற்பு அதிகரித்து வருகிறது.

சோலார் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை வீட்டிலேயே பயன்படுத்துவதோடு, மீதமுள்ள மின்சாரத்தை மின்வாரியத்திற்கே வழங்கும் Net Metering முறையும் இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இதன் மூலம், மின்கட்டணத்தை குறைப்பதோடு, சில குடும்பங்கள் கூடுதல் வருமானத்தையும் பெறும் நிலை உருவாகியுள்ளது. அதே நேரத்தில், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பெருநகரங்கள் ஏன் பின்தங்குகின்றன என்ற கேள்வியும் எழுகிறது.

அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமாக இருப்பது, தனித்தனி மேற்கூரைகள் இல்லாதது, கட்டட அனுமதி மற்றும் பராமரிப்பு சிக்கல்கள் ஆகிய காரணங்களால், பெருநகரங்களில் Rooftop Solar விரிவாக்கம் எதிர்பார்த்த அளவுக்கு நடைபெறவில்லை.

இதனால், இந்தியாவின் சோலார் வளர்ச்சியை இப்போது சிறிய நகரங்கள்தான் வழிநடத்துகின்றன. சூரிய ஒளி அதிகம் கிடைக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் Rooftop Solar அமைப்புகளை ஊக்குவித்தால், மின்சார உற்பத்தி மட்டுமல்ல, மின்கட்டணச் சுமையும் குறையும். சுற்றுச்சூழல் பாதுகாப்பும் வலுப்பெறும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு காலத்தில் சோலார் என்பது வசதி படைத்தவர்களின் தேர்வாக இருந்தது. இன்று அது சாதாரண குடும்பங்களுக்கே சாத்தியமாகியிருக்கிறது.

பெருநகரங்களை விட, சிறிய நகரங்களே இந்தியாவின் பசுமை ஆற்றல் புரட்சிக்கு புதிய முகவரியாக உருவெடுத்திருப்பது, நாட்டின் எரிசக்தி எதிர்காலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

Tags: solar power adoption.India's Tier-2 and Tier-3 citiesCentral Government's solar rooftop scheme.solar powermajor metropolitan cities
ShareTweetSendShare
Previous Post

நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் : உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 3வது நாளாக போராட்டம்!

Related News

நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் : உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 3வது நாளாக போராட்டம்!

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் அளிப்பது எப்படி? – தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

அரசுப் பள்ளிகளில் பரவும் ஆயுத கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தென் சீன கடலுக்கு உரிமை கொண்டாடும் சீனா : ஜப்பான் தூதரை நேரில் அழைத்து விளாசல் சிறப்பு தொகுப்பு!

யுத்த களமான ஹார்முஸ் ஜலசந்தி : பலியாகும் இந்திய மாலுமிகள் : காரணம் என்ன? – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயிலுக்கு சொந்தமான ரூ 100 கோடி மதிப்பிலான நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது – விஸ்வ ஹிந்து பரிஷத் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

சூரிய ஒளியில் ஜொலிக்கும் சிறிய நகரங்கள் : இந்தியாவின் புதிய சோலார் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

நான் எங்கும் ஓடி ஒளியவில்லை – காவல்துறைக்கு கடிதம் எழுதிய செந்தில் பாலாஜி!

இன்றைய தங்கம் விலை!

காமராஜரின் சேவையுணர்வும் சுயநலமற்ற தலைமைத்துவமும் வருங்காலத் தலைமுறைகளுக்கு வழிகாட்டும் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

பொதுவாழ்வில் சிறந்த ஆளுமையாக திகழ்ந்தவர் காமராஜர் – பிரதமர் மோடி புகழாரம்!

அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்த முதலமைச்சர் விஜய்தான் களவாணி – இபிஎஸ் விமர்சனம்!

உலகக்கோப்பை கால்பந்து தொடர் – இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது ஸ்பெயின்!

2031ஆம் ஆண்டுக்குள் 20,000 பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் – தமிழக அரசு முடிவு!

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

நாடு முழுவதும் ரூ.81,000 கோடி சொத்துக்கள் முடக்கம்; அமலாக்கத்துறை தகவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies