மணிப்பூர் சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம்
Jul 24, 2026, 03:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மணிப்பூர் சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம்

 நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

Murugesan M by Murugesan M
Jul 20, 2023, 11:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.  ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை 17 அமர்வுகளாக புதிய நாடாளுமன்றத்தின் கட்டிடத்தில் கூட்டம் நடைபெற்று வருகிறது. தனிநபர் டிஜிட்டல் பாதுகாப்பு மசோதா, வன பாதுகாப்பு மசோதா, டெல்லி நிர்வாக அதிகாரம் தொடர்பான மசோதாக்கள் நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

நாடாளுமன்ற அலுவலகங்கள் சுமுகமான முறையில் நடைபெற எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை மத்திய அரசு நாடி உள்ள நிலையில் அனைத்து பிரச்சனைகளையும் மத்திய அரசு விவாதிக்க தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மணிப்பூர்  சம்பவம் குறித்து  பிரதமர் மோடி இன்று நடைபெறும்  நாடாளுமன்ற கூட்டத்தில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மணிப்பூரில் கலவரக்காரர்கள் இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம்  தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய பிரதமர் மோடி,

மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை என்றும் மன்னிக்க மாட்டோம்.   இந்தியாவில் தாய் மற்றும் சகோதரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.  அனைத்து மாநில முதல்வர்களும் பெண்களின் பாதுகாப்புக்கு தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும், என்றும் மணிப்பூர் சம்பவத்தால் இதயம் கனத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க  வேண்டும், மணிப்பூர் விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க தவறினால் உச்ச நீதிமன்றம் தலையிடும். மணிப்பூர் விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திர சூட்  தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மணிப்பூர்  சம்பவம் குறித்து, மணிப்பூர் முதலமைச்சர் பிரேன்  சிங்யுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags: PM ModiNarendra ModiModi
ShareTweetSendShare
Previous Post

சந்திரயான் -3 விண்கலத்தை புவியின் 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் முயற்சி வெற்றி- இஸ்ரோ

Next Post

மணிப்பூர் தொடர்பான சர்ச்சை வீடியோவை நீக்க வேண்டும்- சமூகவலைத்தள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

Related News

பாகிஸ்தானுக்கு அடுத்த’செக்’ : சிந்து நதியில் நீர்வளத் திட்டங்களை தீவிரப்படுத்தும் இந்தியா -சிறப்பு தொகுப்பு!

நீட் விவாதத்தைத் தடுத்து நிறுத்துவதே காங்கிரசின் நோக்கம் – கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

நீட்தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விசாரிக்க விரைவு நீதிமன்றம் – பிரதமர் மோடி உறுதி!

டெல்லியில் மாணவர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் வன்முறை – பொதுமக்கள், போலீசார் மீது தாக்குதல்!

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

Load More

அண்மைச் செய்திகள்

ஜந்தர் மந்தரில் குழப்பம்; சீக்கியர்கள் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இடையே கைகலப்பு

அரிய வகை கனிமங்கள் : ஜப்பானுக்கு ஏற்றுமதியை நிறுத்திய சீனா – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பதிவு மோசடி வழக்கு – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி வழக்கு!

தூத்துக்குடியில் விசாரணைக்கு சென்றவர் உயிரிழப்பு – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகள் திரைப்படம் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்து இணையத்தில் பதிவு – காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என நயினார் குற்றச்சாட்டு!

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி – அலிரேசா ஃபிரோஜா சாம்பியன்!

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி – தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு!

புதியவர்களுக்கு சிறிது காலம் அவகாசம் தர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் கருத்து!

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies