நாட்டில் புற்றுநோயால் பெண்களே அதிகம் இறந்துள்ளனர்.
Apr 16, 2026, 07:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டில் புற்றுநோயால் பெண்களே அதிகம் இறந்துள்ளனர்.

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jul 29, 2023, 02:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா முழுவதும் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதில் கடந்த 19 ஆண்டுகளில் நாட்டில் ஆண்களை விட பெண்கள்தான் அதிக புற்றுநோயால் பாதித்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் புற்றுநோய் இறப்பு விகிதம் ஆண்டுதோறும் ஆண்களிடையே 0.19% குறைந்துள்ளது. ஆனால் அதேநேரத்தில் பெண்களின் 0.25% அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக இரு பாலினத்தை சேர்த்து 0.02%-ஆக அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது. அங்கு கடந்த ஆண்டு 2 லட்சத்து 10 ஆயிரத்து 958 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் 93 ஆயிரத்து 536 பேருக்கு பாதிப்பு உள்ளது. கடந்த ஆண்டு நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 14 லட்சத்து 61 ஆயிரத்து 427 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். புற்றுநோய் இறப்பிலும் உத்தரபிரதேசம் முன்னிலையில் உள்ளது. அங்கு ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 818 பேர் இறந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 50 ஆயிரத்து 841 பேர் இறந்துள்ளனர். இவ்வாறு மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, தேசிய சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக, தொற்று அல்லாத நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் தேசிய திட்டத்தின் கீழ் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தொழில்நுட்ப உதவிகளையும், நிதி உதவிகளையும் வழங்குகிறது. இதில் புற்றுநோய், மேற்படி திட்டத்தின் ஒரு பகுதி ஆகும். புற்றுநோய் தடுப்புக்கான உள்கட்டமைப்பு, மனிதவள மேம்பாடு, சுகாதார மேம்பாடு மற்றும் விழிப்புணர்வை உருவாக்குதல், ஆரம்பகால நோயறிதல் போன்றவற்றில் இந்த திட்டம் கவனம் செலுத்துகிறது. சிகிச்சைக்காக நோயாளிகளுக்கும் நிதியுதவி அளிக்கப்படுகிறது.

மேலும் கடந்த 3 ஆண்டுகளில் நாட்டில் புற்றுநோய் பாதிப்பு மற்றும் இறப்புகள் குறித்த புள்ளிவிவரங்களையும் மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அளித்துள்ளது. அதன்படி, நாட்டில் கடந்த 2020-ம் ஆண்டு 13 லட்சத்து 92 ஆயிரத்து 179 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்துள்ளது. இது 2021-ம் ஆண்டு 14 லட்சத்து 26 ஆயிரத்து 447 ஆக அதிகரித்து, 2022-ம் ஆண்டு 14 லட்சத்து 61 ஆயிரத்து 427 ஆக உயர்ந்துள்ளது.

அதைப்போல் புற்றுநோய் இறப்புகளை எடுத்துக்கொண்டால் 2020-ம் ஆண்டு 7 லட்சத்து 70 ஆயிரத்து 230 பேரும், 2021-ம் ஆண்டு 7 லட்சத்து 89 ஆயிரத்து 202 பேரும், 2022-ம் ஆண்டு 8 லட்சத்து 8 ஆயிரத்து 558 பேரும் இறந்துள்ளனர்.

Tags: cancerawarnesscancercenses2023healthnewsuttar pradesh
ShareTweetSendShare
Previous Post

மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவத்தில், சிபிஐ வழக்குப்பதிவு

Next Post

‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை தமிழக அரசியலை மாற்றும் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

Related News

சமூகத்திற்காக வாழ்ந்தவர்கள் மகான்கள் – பிரதமர் மோடி புகழாரம்!

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவியிடம் கஞ்சா கும்பல் அத்துமீறல் – இபிஎஸ் கண்டனம்!

திருச்செந்தூர் NDA வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

கோவை மருத்துவமனையில் வானதி சீனிவாசன் – நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார் டெல்லி முதல்வர் ரேகா குப்தா!

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆதரவு – பிரதமருக்கு பிரதீபா பாட்டில் கடிதம்!

ஈரான் உடனான போர் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளது – ட்ரம்ப் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வேட்பு மனுவில் உதயநிதி தெரிவித்துள்ள சொத்து விவரம் குறித்த வழக்கு – வருமான வரித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவி போதை நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் – அண்ணாமலை கண்டனம்!

திமுகவினர் ஆபாசமாக பேசியதால் பெண் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்!

சென்னை மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு – மீனவர்கள் போராட்டம்!

இந்துக்களையும், இந்து தர்மத்தை பற்றியும் கொச்சையாக பேசும் திமுக – ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவியிடம் கத்தி முனையில் போதை இளைஞர்கள் அத்துமீறல்!

அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை – ஹோட்டலுக்கு வாடகை செலுத்தாத பாகிஸ்தான்!

அதிமுக ஆட்சி அமைந்ததும், விவசாய பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் – இபிஎஸ்

மழை, வெள்ளத்தை எதிர்கொள்ள நடவடிக்கை : பேரிடர் மேலாண்மையை மேம்படுத்தும் மகாராஷ்டிரா – சிறப்பு கட்டுரை!

E CABINET-ஆக மாற்றப்பட்ட திரிபுரா அமைச்சரவை : சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies