ஹரியானா கலவரம்: செய்திக்கு பின்னால்..!
May 6, 2026, 12:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹரியானா கலவரம்: செய்திக்கு பின்னால்..!

நடந்ததும், நடப்பதும் என்ன?!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 2, 2023, 07:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹரியானா மாநிலத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினருக்கும், முஸ்லீம்களுக்கும் ஏற்பட்ட மோதல், கலவரமாக வெடித்திருக்கிறது. இச்சம்பவத்தில் நடந்தது ஒன்றாக இருக்க, ஊடகங்கள் வேறு விதமாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

ஹரியானா மாநிலம் குருகிராம் அருகே உள்ள நூஹ் பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் ‘பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா’ என்கிற பெயரில் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதைக் குருகிராம் சிவில் லைன்ஸிலிருந்து பா.ஜ.க. மாவட்டத் தலைவர் கார்கி கக்கார் தொடங்கி வைத்தார். இப்பேரணி  முஸ்லீம்கள் அதிகம் வசிக்கக் கூடிய கேத்லா மோட் அருகே சென்றபோது, முஸ்லீம் இளைஞர்கள் கும்பல் ஒன்று பேரணியை தடுத்து நிறுத்தியது. மேலும், பேரணியைத் தொடர விடாமல்  இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதல் கைமீறிய நிலையில், கல்வீச்சு, கார் உள்ளிட்ட வாகனங்களுக்குத் தீவைப்பு என பெரும் கலவரமாக வெடித்தது. இதனால், கேத்லா மோட் பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது. தகவலறிந்த காவல்துறையினர்  விரைந்து சென்று, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலவரத்தை ஒடுக்க முயன்றனர். ஆனால், வன்முறையாளர்கள் காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இதில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த வீரர் ஒருவரும், காவலர் ஒருவரும் கொல்லப்பட்டனர். மேலும், காவல் துறையைச் சேர்ந்த பலரும் படுகாயமடைந்தனர். அதேப்போல, கலவரத்தில் ஈடுபட்ட 4 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்வத்தைத் தொடர்ந்து, நூஹ் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதற்றம் அதிகரித்தது. இதனால், அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, இணைய வசதியும் தடைச் செய்யப்பட்டது. பேரணியில் பங்கேற்ற பெண்கள் உள்ளிட்ட 2,500 பேர் அருகிலுள்ள காவல் நிலையங்களிலும், கோயில்களிலும் தஞ்சமடைந்தனர். இந்த விவகாரத்தில் பேரணியாகச் சென்ற விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரை முஸ்லீம் இளைஞர்கள் வழிமறித்து தாக்கியதால்தான் கலவரம் வெடித்தது.

நிலைமை இப்படி இருக்க, கலவரத்தை விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர்தான் தூண்டியதுபோல சித்தரித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. அதேபோல, சமூக வலைத்தளங்களிலும் விஷம பிரசாரம் செய்து வருகின்றனர்.
இது இப்படி இருக்க, கலவரம் நூஹ் பகுதியில் மட்டுமின்றி, அருகிலுள்ள குர்கான், ஃபரிதாபாத், பல்வால் ஆகிய மாவட்டங்களுக்கும் பரவியது. இதனால் அம்மாவட்டங்களில் 1,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். மேலும், ஹரியானா கலவரத்தை கண்டித்து விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்பினர் இன்று டெல்லியில் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நிலைமையை கண்காணிக்க காவல்துறையினர் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனிடையே, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரின் போராட்டத்திற்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.யு.சிங், “தலைநகர் பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சமூகத்தின் இனப்படுகொலைக்கு அழைப்பு விடுக்கும் வகையில் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் வெளியிடப்படுவது கவலையளிக்கிறது” என்று வாதிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு, போராட்டத்திற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. அதேசமயம், பேரணிகளின் போது வெறுப்பூட்டும் பேச்சுக்களோ, வன்முறைகளோ நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மாநில அரசுக்கும், டெல்லி காவல்துறைக்கும் உத்தரவிட்டது. மேலும், வெறுப்பு பேச்சு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

அதோடு, போதுமான அளவில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். அனைத்து விஷயங்களையும் பதிவு செய்ய வேண்டும். பேரணி நடத்துவதாக, வன்முறையை தூண்டும் வகையில் நடந்து கொள்வதை அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டதோடு, வகுப்பு வாத கலவரம் விவகாரத்தில் ஹரியானா, டில்லி, உ.பி. ஆகிய 3 மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

“பெண்கள் முன்னேற்றமே உலக முன்னேற்றம்” – பிரதமர் நரேந்திர மோடி

Next Post

அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிப்பது மிக மிக அவசியம்- அமலாக்கத்துறை வாதம்

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies