மணிப்பூர் விவகாரம்: 3 நீதிபதிகள் கொண்ட கண்காணிப்புக் குழு அமைப்பு!
Oct 18, 2025, 12:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணிப்பூர் விவகாரம்: 3 நீதிபதிகள் கொண்ட கண்காணிப்புக் குழு அமைப்பு!

Web Desk by Web Desk
Aug 8, 2023, 12:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

மணிப்பூர் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை கண்காணிக்க 3 பெண் நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

மணிப்பூர் மாநிலத்தில் இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக குக்கி சமூகத்தினருக்கும்,  மெயிட்டி சமூகத்தினருக்கும் இடையே கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக வன்முறைகள் நடந்து வருகிறது. இதனிடையே  பழங்குடியின பெண்கள் மீதான வன்முறை காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. உச்சநீதிமன்ற விசாரணைக்கு மணிப்பூர் மாநில டி.ஜி.பி. ராஜிவ் சிங் நேரில் ஆஜரானார். அப்போது, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி, மணிப்பூர் விவகாரத்தை மிகவும் கவனமுடன் கையாண்டு வருவதாகவும், இது தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருப்பதாகவும் கூறினார்.

இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “மணிப்பூர் விவகாரத்தில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். ஆகவே, மேற்கண்ட விவகாரம் தொடர்பான ஒட்டுமொத்த விசாரணையையும் கண்காணிக்க ஓய்வுபெற்ற 3 உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு அமைக்கப்படுகிறது. இக்குழு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கும்” என்று உத்தரவிட்டனர்.

அதன்படி, காஷ்மீர் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கீதா மிட்டல், மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஷாலினி ஜோஷி, டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆஷா மேனன் ஆகியோர் இக்குழுவில் இடம்பெறுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

Tags: supreme courtjustice asha menonjustice shalini joshijustice gita mittal3 retired judgesmanipur issue
ShareTweetSendShare
Previous Post

இந்திய தொலைத்தொடர்புத் துறையில் ஒரு புரட்சி – ஜிசாட் -24

Next Post

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தொடர் முழுவதும் இடைநீக்கம்!

Related News

தீபாவளி பண்டிகை : மக்களின் மனம் கவர்ந்த “மாப்பிள்ளை சம்பா முறுக்கு” – சிறப்பு தொகுப்பு!

ஐப்பசி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

தீபாவளி பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை – மகிழ்ச்சியில் திருப்பூர் பனியன் நிறுவன ஊழியர்கள் – சிறப்பு தொகுப்பு!

களைகட்டும் தீபாவளி வியாபாரம் – தங்கம் விலை உயர்வால் கவரிங் விற்பனை அதிகரிப்பு!

ரஷ்ய எண்ணெய் கொள்முதல் நிறுத்தமா? : டிரம்பின் கருத்துக்கு இந்தியா மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல – தேர்தல் ஆணையம் பதில்!

Load More

அண்மைச் செய்திகள்

தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

பணி நிரந்தரம் ஆன 2,000 ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 3 மாத ஊதியம் வழங்கப்படாத விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

கண்துடைப்புக்காக, ஆணையம், குழு என அமைத்து மக்கள் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

கரூர் துயரச் சம்பவத்தில் எதை மறைக்கப் பார்க்கிறது திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

கடலூர் அருகே மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

நெல்லையில் ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க கோரி மாகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்!

பேரவையில் அன்புமணி தரப்பு எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கை முன் தர்ணா!

கோவை ஜி.டி.நாயுடு மேம்பால சாலை பாதுகாப்பை சீர்படுத்த நடவடிக்கை தேவை – வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – சென்னை காவல் ஆணையருக்கு நோட்டீஸ்!

ஐப்பசி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies